மதுபோதையில் தகராறு செய்த தந்தை அடித்துக் கொலை – 17 வயது சிறுவன் கைது!

 

மதுபோதையில் தகராறு செய்த தந்தை அடித்துக் கொலை – 17 வயது சிறுவன் கைது!

விருதுநகர்

விருதுநகரில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட திரையரங்க தொழிலாளியை அடித்துக்கொன்ற , அவரது 17 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் குருசாமி (41). இவர் திரையரங்குகளில் போஸ்டர் ஒட்டும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான குருசாமி, மதுபோதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

மதுபோதையில் தகராறு செய்த தந்தை அடித்துக் கொலை – 17 வயது சிறுவன் கைது!

நேற்று முன்தினம் வழக்கம்போல் மதுபோதையில் வந்த குருசாமி, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, அவரது 17 வயது மகன் கண்டித்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிறுவன் குருசாமியை கையால் தாக்கினார். அப்போது, குருசாமி மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குருசாமியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைதுசெய்தனர்.