சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

மேல்மருவத்தூர் அருகே வீட்டில் தூங்கிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருத்துவர் அருகேயுள்ள கடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவரது தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் பாலியல் தொல்லை அளிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கத்தி கூச்சலிட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

அதனை கேட்டு அக்கம்பக்கத்தின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த திருமணமான ராஜாராமன் என்பவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கிராம மக்கள் பிடித்து, மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைதுசெய்த போலீசார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.