17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை- இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

 

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை- இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கடலூர்

கடலூரில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2018ஆம் ஆண்டு கடலூர் சுப்பராயலு நகரை சேர்ந்த 17 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்தார்.

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை- இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகாரின் பேரில் கடலூர் காவல் ஆய்வாளர் பாண்டிசெல்வி, விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த, அவரை கைதுசெய்தார். இதுதொடர்பான வழக்கு கடலூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற அமர்வில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை இன்று நிறைவு பெற்றதை அடுத்து வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எழிலரசி, குற்றவாளி விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.