சிறுமி பாலியல் வன்கொடுமை- 17 வயது சிறுவன் கைது, நண்பருக்கு வலை

 

சிறுமி பாலியல் வன்கொடுமை- 17 வயது சிறுவன் கைது, நண்பருக்கு வலை

திருவள்ளூர்

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகிய நபரை தேடிச்சென்ற சிறுமியை, நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனால், அறிமுகமான 3-வது நாளிலேயே அந்த சிறுமி காதலனை தேடி திருவள்ளுருக்கு சென்றார். அங்கு சிறுமியை சந்தித்த காதலன், அவரை திருப்பாச்சூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை- 17 வயது சிறுவன் கைது, நண்பருக்கு வலை

அங்கு, தனது நண்பருடன் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்து திரும்பிச்சென்ற சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அவர்கள் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், இருவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீசார், சிறுவனை கைதுசெய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, சிறுவனின் நண்பரை தேடி வருகின்றனர்..