சிறுமிக்கு பாலியல் தொல்லை; 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

கோவை

கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் 5 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், மதுபோதையில் சிறுமியை தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியை தேடிய அவரது பெற்றோர், அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

அப்போது, கதவு பூட்டியிருந்த நிலையில், வீட்டின் உள்ளே சிறுமியின் கைகளை கட்டிபோட்டு அவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அருகாமையில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து, சிறுமியை மீட்டனர். பின்னர் அந்த சிறுவனை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், அவனை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.