கூடுதல் மின்கட்டணம் வசூலித்ததால் ரூ.17 ஆயிரம் அபராதம்!

 

கூடுதல் மின்கட்டணம் வசூலித்ததால் ரூ.17 ஆயிரம் அபராதம்!

நெல்லையில் வீட்டு மின்சாரத்துக்கு கூடுதலாக ரூ.2000 வசூலித்ததால், ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அபுபக்கரின் வீட்டில், கூடுதலாக ரூ.2,277 மின் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான அபுபக்கர், கூடுதல் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் ஆணையம், மின் கட்டணம் விதித்த மின் பொறியாளர் உள்ளிட்டோரை விசாரணைக்கு உட்படுத்தியது.

கூடுதல் மின்கட்டணம் வசூலித்ததால் ரூ.17 ஆயிரம் அபராதம்!

அதன் முடிவில் கூடுதலாக ரூ.2,277 மின் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது உறுதியானதால், வழக்கில் சம்பந்தப்பட்ட மின் பொறியாளர் உள்ளிட்டோருக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மின் கட்டண விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.