சென்னையில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் மேலும் 17 பேர் உயிரிழப்பு!

 

சென்னையில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் மேலும் 17 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,496 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் மேலும் 17 பேர் உயிரிழப்பு!

நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் மேலும் 17 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் இதுவரை 17பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றால் ராஜீவ் காந்தி -7, ஓமந்தூரார் -2, ஸ்டான்லி – 2, கே. எம். சி -4, தனியார் மருத்துவமனை 2 என மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.