இதுவரை இல்லாத அளவுக்கு 17.40 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

 

இதுவரை இல்லாத அளவுக்கு 17.40 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,808பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 48 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இன்று ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு 17.40 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை முதல் முறையாக 17.40 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து மாநில தொகுப்புக்கு குளிரூட்டும் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படவுள்ளது. கொரோனா 3ஆம் அலை இன்னும் சில நாட்களில் இந்தியாவை தாக்கக்கூடும் என்பதால் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.