17வயசு சிறுமியை 3 இளைஞர்கள் ஒரு வருசமாக துன்புறுத்தி.. மாடியில் இருந்து வீசிய கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ

 

17வயசு சிறுமியை 3 இளைஞர்கள் ஒரு வருசமாக துன்புறுத்தி..  மாடியில் இருந்து வீசிய கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ

இரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய வலுக்கட்டாயமாக மூன்று இளைஞர்கள் தூக்கிச்சென்றுள்ளனர். பெற்றோர்கள் இதை சத்தம் போட்டு தடுத்ததால், ஆத்திரத்தில் 2வது மாடியில் இருந்து சிறுமியை தூக்கி வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

17வயசு சிறுமியை 3 இளைஞர்கள் ஒரு வருசமாக துன்புறுத்தி..  மாடியில் இருந்து வீசிய கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ

மாடியில் இருந்து விழுந்ததில் முதுகெலும்பு முறிந்து கிடக்கும் அந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

உத்தரபிரதே மாநிலத்தில் மதுரா நகரத்தில்தான் இந்த கொடூரம் சம்பவம் நடந்திருக்கிறது.

இந்த சம்பவத்தை அடுத்து சிறுமியின் தந்தை போலீசில் அளித்துள்ள புகாரில், தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே வசித்து வரும் மூன்று இளைஞர்கள் கடந்த ஒரு வருடமாக தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். நான் இதை கண்டித்து வைத்தேன். அப்படியும் அவர்கள் கேட்கவில்லை. இரவு 8 மணிக்கு வீட்டிற்குள் புகுந்து என் மகளை துன்புறுத்தி தூக்கிச்சென்றார்கள். நாங்கள் தடுத்ததால் மாடியில் இருந்து தூக்கி வீசிவிட்டு ஓடிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் மூன்று இளைஞர்களில் இரண்டு பேரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.

மாடியில் இருந்து கீழே விழுந்ததில் முதுகு எலும்பு முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சிறுமி.