எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா!16 வயது சிறுமிக்கு 66 வயது முதியவர் காதல் கடிதம்

 

எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா!16 வயது சிறுமிக்கு 66 வயது முதியவர் காதல் கடிதம்

கோவை போத்தனூர் அருகே எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வாஎன்று சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசிப்பவர் முகமது பீர் பாஷா வயது 66. அவர் அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளார். அந்த சிறுமியிடம் “எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா” என்று கேட்டு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை அச்சிறுமி அவரின் தாயாரிடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பந்தபட்ட நபரின் குடும்பத்தாரிடம் அச்சிறுமியின் வீட்டார் தெரிவித்தபோது அந்த முதியவரை கண்டித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத வயதானவர் மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.

எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா!16 வயது சிறுமிக்கு 66 வயது முதியவர் காதல் கடிதம்

இதுதொடர்பாக அந்த சிறுமியின் குடும்பத்தினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் கொடுத்தனர். புகாரை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.