கன்னியாகுமரி:16 வயது சிறுமியை மீட்டுத்தரக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் புகார்
Oct 29, 2020, 15:35 IST1603965914000
கன்னியாகுமரியில் ஆசை வார்த்தை கூறி கடத்திச்செல்லப்பட்ட தனது 16 வயது சிறுமியை மீட்டுத்தரக் கோரி, சிறுமியின் தாயார், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த அந்த பெண் தனது மனுவில், தனது 16 வயது மகளை, கட்டிட பணிக்கு வந்த லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடந்த 25ஆம் தேதி கடத்திச்சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, 26ஆம் தேதி புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ள அவர், தனது மகளை மீட்டுத் தரவும், அவரை கடத்திச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.