ஸ்டாலின் நினைப்பதை செய்து முடிக்கும் மூவேந்தர்கள்!

 

ஸ்டாலின் நினைப்பதை செய்து முடிக்கும் மூவேந்தர்கள்!

‘தமிழகம் மீட்போம்’-2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மதுரை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க,.ஸ்டாலின் இதில் காணொளி காட்சி மூலமாக பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், ‘’மூர்த்தி, தளபதி, மணிமாறன் ஆகிய மூன்று பேரும் மூவேந்தர்களாக இந்த மதுரை மண்ணை கழகத்தின் களமாக ஆக்கிக் காட்டி இருக்கிறார்கள். நான் என்ன நினைக்கின்றேனோ அதனை அப்படியே செய்து காட்டும் மதுரைத்தளபதிகளாக இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

ஸ்டாலின் நினைப்பதை செய்து முடிக்கும் மூவேந்தர்கள்!

வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல துரிதமாகவும், கூர்மையாகவும் செயல்பட்டு வருகிறார்கள். அந்த மூன்று பேருக்கும் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’என்றார்.

’’எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் திருச்செந்தூரை நோக்கி நீதிகேட்டு நெடும்பயணத்தை மதுரையில் இருந்துதான் தொடங்கினார். நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அத்தகையை நீதியின் அடையாளமாக மதுரை மண்ணில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள ஆற்ற மிகுந்த செயல்வீரர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி, மு.மணிமாறன் ஆகிய மூவருக்கும் நன்றி’’ மீண்டும் ஒரு முறை மூவேந்தர்களுக்கு நன்றி மழை பொழிந்த ஸ்டாலின்,

கோட்டையை மீட்கும் ஜனநாயகப்போர்தான் வருகின்ற சட்டமன்ற தேர்தல். தமிழகத்தின் மானம் காக்க அனைவரும் மருதுபாண்டியர்களாக எழுங்கள். கண்ணகியாக எழுங்கள்’’ என்று தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.