கோவை, திருப்பூர், தருமபுரி திமுக இளைஞரணிக்கு உதயநிதி விடுத்திருக்கும் அறிவிப்பு

 

கோவை, திருப்பூர், தருமபுரி திமுக இளைஞரணிக்கு உதயநிதி விடுத்திருக்கும் அறிவிப்பு

திமுக இளைஞரணியில் கோவை, திருப்பூர், தருமபுரி மாவட்டங்களில் காலியாக இருக்கும் அமைப்பாளர் – துணை அமைப்பாளர் பொறுப்பிடங்களை நிரப்புவதில் தீவிரம் காட்டி வருகிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின்.

கோவை, திருப்பூர், தருமபுரி திமுக இளைஞரணிக்கு உதயநிதி விடுத்திருக்கும் அறிவிப்பு

கோவை கிழக்கு – மேற்கு, கோவை புறநகர்வடக்கு-தெற்கு-கிழக்கு, திருப்பூர் வடக்கு – தெற்கு-கிழக்கு-மத்தியம், தருமபுரி கிழக்கு -மேற்கு மாவட்டங்களில் காலியாக இருக்கும் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணைஅமைப்பாளர் பொறுப்பிடங்கள், திருப்பூர் மாநகரில் காலியாக உள்ள மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புடங்களையும் நிரப்புவதற்கு விண்ணப்பங்களை அனுப்பச்சொல்லி இருக்கிறார் உதயநிதி.

40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பொறுப்புகளுக்கு வர விரும்பலாம் என்றும், அவர்கள் தங்களது விபரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து 12.11.2020 அன்று மாலை 6 மணிக்குள் அந்தந்த மாவட்ட கழகங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுகொண்டிருக்கிறார் உதயநிதி.

இதற்கான விண்ணப்பங்கள் முரசொலி நாளிதழிலில் அச்சிடப்பட்டுள்ளது என்றும், அதனை நகல் எடுத்து பூர்த்தி செய்து அனுப்பலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.