கை,கால்,தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும்.. மே.வ. பாஜக தலைவரின் பகீர் பேச்சு

 

கை,கால்,தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும்.. மே.வ. பாஜக தலைவரின் பகீர் பேச்சு

கை,கால்,தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரசும், பாஜகவும் இப்போதே தேர்தல் பிரச்சாரதை தொடங்கிவிட்டன. இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தினை கைப்பறிவிடும் முனைப்பில் இருகின்றனர் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர்.

கை,கால்,தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும்.. மே.வ. பாஜக தலைவரின் பகீர் பேச்சு

இந்நிலையில், பிரச்சாரம் கூட்டமொன்றில் பேசிய மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ், ‘’மம்தா கட்சியினர் தங்களை திருத்திகொள்ள வேண்டும். 6 மாதத்திற்குள் அவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், மம்தா கட்சியினரின் கை,கால், தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும்’’ என்று பேசியுள்ளார். மேலும், ‘’மம்தா கட்சியினரின் ஒழுங்கீன செயல் அதிகரித்தால் வெளியே வரும் அவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாது. மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம். ஒழுங்கீனம் அதிகரித்தால் வீடு திரும்ப முடியாது; கல்லறைக்குத்தான் அனுப்பி வைப்போம்’’என்று எச்சரித்தார்.

திலீப் கோஷின் இந்த பேச்சு மேற்குவங்கத்தில் பெரும் சர்ச்சையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.