திருச்சி: “பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், பள்ளியை நடத்த தயார்”
Nov 7, 2020, 22:12 IST1604767343000
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் சுதாகரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் ரெங்கராஜன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிடவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், அரசு முழு பாதுகாப்பும் வழங்கி, கிருமிநாசினி மற்றும் சுகாதார பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் பள்ளிகளை நடத்த ஆசிரியர் சங்கங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.