திருச்சி: அடர்காடு வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

 

திருச்சி: அடர்காடு வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருச்சி் மாவட்டம் லால்குடி அடுத்த கல்லக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான 1.30 ஏக்கர் பரப்பளவில் அடர்காடுகள் உருவாக்கும் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம்
மரக்கன்றுகள் நடும்விழ நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு கலந்துகொண்டு, அங்கு நாட்டு வகை மரங்களான மகிழம், சொர்க்கம், நீர்மருது,
மலைவேம்பு, புங்கமரம், வேங்கை உள்ளிட்ட 54 வகையான மரக்கன்றுகளை நட்டு, நடவு பணிகளை தொடங்கி வைத்தார்.

திருச்சி: அடர்காடு வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். இவ்விழாவில் பேரூராட்சிக்கான முன்மாதிரி செயல்வடிவ புத்தகத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட, திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெகதீஸ்வரன் பெற்றுக்கொண்டார்