திருவள்ளூர்: பொழிலன் உள்ளிட்டோரை விடுவிக்க கோரி பெரியார் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
Nov 7, 2020, 21:09 IST1604763579000
தமிழ்நாடு தினவிழா கொண்டாடியதற்காக கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, திருவள்ளூரில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், தந்தை பெரியார் கழகத்தை சேர்ந்த பொழிலன் உள்பட தமிழகம் முழுவதும் கைதுசெய்யப்பட்ட 24 பேரை நிபந்தனை இன்றி விடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.