தேசிய நீர் விருது – முதல்வரின் மகிழ்ச்சி

 

தேசிய நீர் விருது – முதல்வரின் மகிழ்ச்சி

நீர் மேலாண்மையில் அக்கறை கொண்டு அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறடு. தமிழகத்திற்கு தேசிய நீர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய நீர் விருது – முதல்வரின் மகிழ்ச்சி

இரண்டாவது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா வரும் நவம்பர் 11,12 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான(2019 -2020) தேசிய நீர் விருதினை தமிழக அரசுக்கு அறிவித்துள்ளது ஜல்சக்தி அமைச்சகம்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘’நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநிலங்களில் முதலிடம் பிடித்து “தேசிய நீர் விருது” பெற்றுள்ளது தமிழ்நாடு.

நீர்மேலாண்மையில் 2019க்கான சிறந்த மாநிலமாக, ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய விருதினை தமிழக அரசு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீர்நிலைகளை புதுப்பித்தலில் வேலூர்,கரூர் மாவட்டங்கள் முதல் இரு இடங்களையும், நீர்நிலைகளை பாதுகாப்பதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும் பெற்றுள்ளது.’’ என்று டுவிட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்தி இருக்கிறார்.