ஈரோடு: தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கைது

 

ஈரோடு: தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கைது

ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்களை போலீசார் கைதுசெய்தனர். ஈரோட்டில் தமிழ்நாடு தினவிழாகொண்டாடியவர்களை கைதுசெய்ததை கண்டித்து, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு: தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கைது


வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிட கழகம், தற்சார்பு விவசாயிகள் சங்கம், திராவிட விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, தமிழ்நாடு தினவிழா கொண்டாட்டத்திற்காக கைதாகிய 21 பேரை விடுவிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனிடையே, அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பெரியாரிய உணர்வாளர்களை கைதுசெய்த போலீசார், பின்னர் அவர்களை விடுவித்தனர்.