ஈரோடு: தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

 

ஈரோடு: தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஈரோட்டில் வயிற்று வலி காரணமாக தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீரப்பன் சத்திரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் தறிப்பட்டறை தொழிலாளி பிரகாஷ்(37). இவரது மனைவி நந்தினி. பிரகாஷுக்கு மதுப்பழக்கம் இருப்பதால், அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

ஈரோடு: தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

இருப்பினும் மருத்துவ சிகிச்சை பெறாத அவர், தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். இதனிடையே மனைவி வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ் வயிற்று வலி தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து அங்கு வந்த நந்தினி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிரகாஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரகாஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்