தர்மபுரி: புறவழிச்சாலை பணிகளை ஆய்வுசெய்த மண்டல கண்காணிப்பு பொறியாளர்
Nov 6, 2020, 22:20 IST1604681404000
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நடைபெற்று வரும் புறவழிச்சாலை பணிகளை, மண்டல கண்காணிப்பு பொறியாளர் இன்று நேரில் ஆய்வுமேற்கொண்டார்.
பாப்பாரப்பட்டி பேரூராட்சியை கடந்தே பென்னாகரம், ஒகேனக்கல், தருமபுரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்ல வேண்டியதால், இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் பாப்பாரப்பட்டி நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதை தவிர்க்கும் விதமாக புறழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த புறவழிச்சாலை அமைய இருக்கும் இடத்தையும், மாவட்டத்தில் நடந்து வரும் நெடுஞ்சாலை துறையின் இதர பணிகளையும் சேலம் மண்டல கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ் இன்று நேரில் ஆய்வு நடத்திச்சென்றுள்ளார்.