தஞ்சாவூர்: தமிழ்நாடு தினம் கொண்டாடியவர்கள் மீதான வழக்கை ரத்துசெய்ய கோரிக்கை

 

தஞ்சாவூர்: தமிழ்நாடு தினம் கொண்டாடியவர்கள் மீதான வழக்கை ரத்துசெய்ய கோரிக்கை

தஞ்சையில் தடையை மீறி தமிழ்நாடு தின விழா கொண்டாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: தமிழ்நாடு தினம் கொண்டாடியவர்கள் மீதான வழக்கை ரத்துசெய்ய கோரிக்கை

தஞ்சையில் கடந்த ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு உருவானதை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி நிகழ்ச்சியில் பங்கேற்ற 24 பேரை கைதுசெய்த போலீசார், அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124 ஏ-வின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர்: தமிழ்நாடு தினம் கொண்டாடியவர்கள் மீதான வழக்கை ரத்துசெய்ய கோரிக்கை

இதனை கண்டித்தும், தமிழக தினத்தை கொண்டாடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும் வலியுறுத்தி தஞ்சை தபால் நிலையம் முன்பு அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.