மதுரை: கிரானைட் குவாரிகளை இயக்க அனுமதிக்க கோரிக்கை

 

மதுரை: கிரானைட் குவாரிகளை இயக்க அனுமதிக்க கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை மீண்டும் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை
விடுத்தனர்.

மதுரை: கிரானைட் குவாரிகளை இயக்க அனுமதிக்க கோரிக்கை

இதுதொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சங்க தலைவர் பி.ஆர்.ராஜசேகரன், மதுரை மாவட்டத்தில் 84 குவார்கள் மீது மட்டுமே
வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், எஞ்சிய 91 குவாரிகளை செயல்பட அனுமதிக்க வேண்டுமென அவர் கேட்டுகொண்டார்.

மேலும்,கிரானைட் குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதில் கற்பனையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த தடையால் 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.