மதுரை: கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநர் சங்கம் போராட்டம்
Nov 5, 2020, 21:48 IST1604593128000
சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மருந்தாளுநர்களுக்கு, அரசாணை 180 படி கூடுதலாக 2 லட்சம் வழங்கவும், உயிரிழந்த மருந்தாளுநர்கள் இழப்பீடு தொகை வழங்கவும் வலியுறுத்தினர்.