தஞ்சை: வேளாண் மசோதக்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

 

தஞ்சை: வேளாண் மசோதக்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை: வேளாண் மசோதக்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண் மசோதாக்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தஞ்சை: வேளாண் மசோதக்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அப்போது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளைபொருள் வணிகக்குழு ஊக்குவிப்பு சட்டம் உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிடவும் அவர்கள் வலியுறுத்தினர்.