ஊட்டி: முதல்வர் வருகையையொட்டி ஊட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்

 

ஊட்டி: முதல்வர் வருகையையொட்டி ஊட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக முதலமைச்சர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருவதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை
நடைபெறும் கொரோனா ஆய்வுக்கூட்டத்தில முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று, அரசு நலத்திட்ட உதவிகளை துவக்கிவைக்க உள்ளார்.

ஊட்டி: முதல்வர் வருகையையொட்டி ஊட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்

இந்த கூட்டத்தின்போது, விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கும் அவர், பின்னர் மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

ஊட்டி: முதல்வர் வருகையையொட்டி ஊட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்

இதனையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் ஊட்டி தமிழகம் மாளிகை வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருகிறது. மேலும், சமூக இடைவெளிவிட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் வருகையை முன்னிட்டு அங்கு ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.