ஈரோடு: கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா
Nov 5, 2020, 00:32 IST1604516544000
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, ஈரோட்டில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஈ.வி.என் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ஜோதிமணி தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அப்போது, மின் வட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர், அலுவலர்களின் பதவிகளை பறிக்கக்கூடாது என்றும், துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.