தஞ்சாவூர்: பாசனத்திற்கு நீர் திறக்கக்கோரி கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
Nov 4, 2020, 21:53 IST1604507009000
தஞ்சையில் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை காக்க, கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் கால்வாயில் இறங்கி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் வடவாற்றின் தற்போது முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட புதூர் பாசன வாய்க்காலில் பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் வடக்குதோப்பு, புளியங்குடி உள்ளிட்ட பல ஊர்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெல் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளன. உடனடியாக பொதுப்பணித்துறையினர் புத்தூர் பாசன வாய்க்காலில் பாசனத்திற்கு தேவையான அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.