தர்மபுரி: சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் உயிரிழப்பு

 

தர்மபுரி: சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் உயிரிழப்பு

தர்மபுரி அருகே நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பாவளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). பெங்களூரில் கட்டிட ஒப்பந்ததாரக பணிபுரிந்து வரும் இவருக்கு, அலமேலு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

தர்மபுரி: சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் உயிரிழப்பு

இந்நிலையில் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்த ரமேஷ், நேற்று ராயக்கோட்டைக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பியுள்ளார். காடுசெட்டிப்பட்டி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென வந்த நாய் மீது மோதியதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ரமேஷ் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு, செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்