கிருஷ்ணகிரி: குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது; அரை கிலோ கஞ்சா பறிமுதல்

 

கிருஷ்ணகிரி: குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது; அரை கிலோ கஞ்சா பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி: குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது; அரை கிலோ கஞ்சா பறிமுதல்

ஓசூர் மாநகராட்சி, வக்கீல் லேஅவுட் பகுதி பின்புறமாக இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக, ஓசூர் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீசார், அங்கு கஞ்சா விற்று வந்த சுதாகர் ரெட்டி(40) என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து அரைக்கிலோ கஞ்சா பொட்டலங்களையும் கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.