கன்னியாகுமரி: மின்வாரிய தலைவரை கண்டித்து, தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

கன்னியாகுமரி: மின்வாரிய தலைவரை கண்டித்து, தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, கன்னியாகுமரியில் இன்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி: மின்வாரிய தலைவரை கண்டித்து, தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என்றும், பதவி உயர்வுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் பறிக்கக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், மின் ஊழியர்கள், பொறியாளர்கள், பகுதிநேர பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.