மதுரை: கனமழையால் வீட்டுச்சுவர் இடிந்ததில், நாதஸ்வர கலைஞர் உயிரிழப்பு

 

மதுரை: கனமழையால் வீட்டுச்சுவர் இடிந்ததில், நாதஸ்வர கலைஞர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் மழையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த நாதஸ்வர கலைஞரின் உடல் மூன்று நாட்களுக்கு பின் இன்று
மீட்கப்பட்டது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் செம்புரணி ரோட்டில் வசிப்பவர் மூக்கையா(55). நாதஸ்வர கலைஞரான இவருக்கு திருமணம் ஆகவில்லை.

மதுரை: கனமழையால் வீட்டுச்சுவர் இடிந்ததில், நாதஸ்வர கலைஞர் உயிரிழப்பு

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் பெய்த கனமழையில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூக்கையா
பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினருக்கு தெரியாத நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

மதுரை: கனமழையால் வீட்டுச்சுவர் இடிந்ததில், நாதஸ்வர கலைஞர் உயிரிழப்பு

இதனையடுத்து இன்று காலையில் அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, மூக்கையாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை: கனமழையால் வீட்டுச்சுவர் இடிந்ததில், நாதஸ்வர கலைஞர் உயிரிழப்பு