தர்மபுரி: வேளாண் அலுவலர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம்
Nov 3, 2020, 16:45 IST1604402137000
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் அலுவலர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றது.
தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் பகுதிகளில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டங்களில், வேளாண் துறை ஊழியர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, அமைச்சரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.