கன்னியாகுமரி: கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

கன்னியாகுமரி: கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய மாற்றம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் அஞ்சல் துறை ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி: கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோயில் அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு
கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது, ஓய்வுபெற்ற தபால்காரர்களுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஊதிய மாற்றம் செய்யவும்,
நிலுவை தொகையை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தினர். மேலும், எழுத்தர்களுக்கு பயிற்சி காலத்தையும் கணக்கில் கொண்டு, ஓய்வூதியம் வழங்கிடவும்,அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டினை அமல்படுத்தவும் அவர்கள் வலியுறுத்தினர்.