திருவள்ளூர்: வங்கி ஏ.டி.எம், கோயிலில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி

 

திருவள்ளூர்: வங்கி ஏ.டி.எம், கோயிலில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி

திருத்தணி அருகே அடுத்தடுத்து பொதுத்துறை வங்கி ஏ.டி.எம் மற்றும் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர்: வங்கி ஏ.டி.எம், கோயிலில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளனர் அப்போது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச்சென்ற அந்த மர்மநபர்கள், அருகாமையில் உள்ள பட்டி விநாயகர் கோயிலின் உண்டியல் பூட்டை உடைத்தும் திருட முயற்சித்துள்ளனர்.

திருவள்ளூர்: வங்கி ஏ.டி.எம், கோயிலில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி

ஆனால் அங்கும் பணத்தை திருட முடியாத நிலையில் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் தப்பிச்சென்றனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தணி போலீசார், சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்: வங்கி ஏ.டி.எம், கோயிலில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி