திருப்பத்தூர்: ஊராட்சி செயலர் பணியிடை நீக்கத்தை கண்டித்து, காத்திருப்பு போராட்டம்

 

திருப்பத்தூர்: ஊராட்சி செயலர் பணியிடை நீக்கத்தை கண்டித்து, காத்திருப்பு போராட்டம்

திருப்பத்தூரில் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சக ஊராட்சி செயலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்: ஊராட்சி செயலர் பணியிடை நீக்கத்தை கண்டித்து, காத்திருப்பு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சி செயலர் ஜீவஜோதி. இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி அலுவலகத்திற்குள், அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நேற்று பணிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜீவஜோதியை பணியிடை நீக்கம் செய்ததை திரும்பப் பெறக் கோரி, ஆலங்காயம் ஒன்றியத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள் இன்று ஒருநாள் தன்னிச்சை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து அவர்கள் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.