கன்னியாகுமரி: “இந்து தெய்வங்களை அவமதிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்” – பொன்.ராதாகிருஷ்ணன்

 

கன்னியாகுமரி: “இந்து தெய்வங்களை அவமதிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்” – பொன்.ராதாகிருஷ்ணன்

இந்து மத தெய்வங்களையும், தெய்வ சின்னங்களையும் அவமதித்து வருவதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி: “இந்து தெய்வங்களை அவமதிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்” – பொன்.ராதாகிருஷ்ணன்

குமரி மாவட்டம் மயிலாடியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், இதற்காக ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கன்னியாகுமரி: “இந்து தெய்வங்களை அவமதிப்பதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்” – பொன்.ராதாகிருஷ்ணன்

மேலும், நாடாளுமன்ற இடைத்தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ, எந்த தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்கிற வகையில், கட்சி ரீதியிலும், அமைப்பு ரீதியிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, பலப்படுத்தப்பட்டு வருவதாக கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், வேல் யாத்திரை என்று சொல்லும்போது, யாருக்கெல்லாம் மடியில் கனம் இருக்கிறதோ, அவர்களுக்கு எல்லாம் அச்சம் இருப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், யாத்திரை நிறைவு பெறும்போது, பல்வேறு விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.