தர்மபுரி: கல்லூரி படித்து வந்தபோது மாயமான மகனை மீட்டுத் தரும்படி பெற்றோர் புகார்

 

தர்மபுரி: கல்லூரி படித்து வந்தபோது மாயமான மகனை மீட்டுத் தரும்படி பெற்றோர் புகார்

தர்மபுரியில் தங்கி கல்லூரி படித்து வந்தபோது மாயமான மகனை மீட்டுத் தரும்படி பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தர்மபுரி: கல்லூரி படித்து வந்தபோது மாயமான மகனை மீட்டுத் தரும்படி பெற்றோர் புகார்

ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்தவர் பொங்கியண்ணன். இவர் மகன் லோகநாதன்(20). இவர் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தர்மபுரியிலேயே வாடகை வீடு ஒன்றில் இவர் தங்கி இருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஊருக்கு வருவதாக போனில் தெரிவித்த லோகநாதன் வீட்டுக்கு செல்லவில்லை என தெரிகிறது.

அவரை தர்மபுரி உட்பட பல இடங்களில் தேடியும் லோகநாதன் கிடைக்கவில்லை. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. எனவே, தங்கள் மகனை கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கோரி அவரது தந்தை பொங்கியண்ணன் தர்மபுரி பி1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.