திண்டுக்கல்- தேனி காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்: டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவு

 

திண்டுக்கல்- தேனி காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்: டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவு

திண்டுக்கல் சரக அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நான்கு காவல் ஆய்வாளர்களுக்கு பணியிடம் வழங்கி திண்டுக்கல், தேனி சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக டி. பாஸ்டின்தினகரன், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளராக ஆர். செந்தில்குமார், தேனி மாவட்டம் அல்லி நகரம் காவல் நிலைய ஆய்வாளராக எல்.மதனகலா மற்றும் தேனி மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்புப் பிரிவிற்கும் ஆர். செந்தாமரை ஆகியோரை நியமித்து 02.11.2020 அன்று திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் எம். எஸ். முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல்- தேனி காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்: டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவு

மேலும் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் பி. உலகநாதன் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்திற்கும், அவ்விடத்தில் பணிபுரிந்து வந்த ஆய்வாளர் எஸ். ஏசுராஜசேகரன் இடையகோட்டை காவல் நிலையத்திற்கும், தேனி மாவட்டம் அல்லி நகரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் பி. சேகர் போடிநாயக்கனூர் தாலுகா காவல் நிலையத்திற்கும் 02.11.2020 அன்று பணி மாறுதல் செய்து திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் எம். எஸ். முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.