கரூர்: போதையில் தகராறு செய்த மகனை அடித்துகொன்ற முதியவர் கைது

 

கரூர்: போதையில் தகராறு செய்த மகனை அடித்துகொன்ற முதியவர் கைது

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை அடித்துகொன்ற முதியவரை போலீசார் கைதுசெய்தனர். அரவக்குறிச்சிஅடுத்த வெஞ்சமாங்கூடலூர் கிராமம் கள்ளி மரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலு நாயக்கர் (70 ). இவரது மகன் சக்திவேல் (40). சக்திவேல் அடிக்கடிமதுஅருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கரூர்: போதையில் தகராறு செய்த மகனை அடித்துகொன்ற முதியவர் கைது

இந்நிலையில் நேற்று மீண்டும் குடித்துவிட்டு வந்த சக்திவேலுக்கும்,பாலுநாயக்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பாலு நாயக்கர் மரக்கட்டையால், மகன் சக்திவேலை அடித்து உள்ளார். இதில்,படுகாயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் பாலு நாயக்கரை கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.