நாகை: கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

 

நாகை: கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

தீபாவளி போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் டி.என்.சி.எஸ்.சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

நாகை: கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

அப்போது, கொள்முதல் பணியாளருக்கு மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாயும், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு எடைகூலி – ஏற்றுக்கூலி மூட்டை ஒன்றுக்கு 15 ரூபாயும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும்,
டி.என்.சி.எஸ்.சி-யில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், தீபாவளி போனஸ் தொகையை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாகை: கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்