தர்மபுரி: டாஸ்மாக் கடை இடமாற்றத்துக்கு எதிராக ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

 

தர்மபுரி: டாஸ்மாக் கடை இடமாற்றத்துக்கு எதிராக ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தர்மபுரி மாவட்டம் கொளத்தூர் பஞ்சாயத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். தர்மபுரி மாவட்டம் கொளத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாகரசம்பட்டி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கடையை நாகரசம்பட்டி கிராமத்திற்குள் இடம்மாற்றும் நோக்கத்துடன் அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

தர்மபுரி: டாஸ்மாக் கடை இடமாற்றத்துக்கு எதிராக ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

இதனால் அதிருப்தி அடைந்துள்ள அந்த கிராமமக்கள் கடையை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து, இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். அந்த மனுவில், தற்போது கடை அமைந்துள்ள இடம் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் உள்ளதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் இடையூறுகள் ஏற்படுவதில்லை என்றும், ஆனால், கிராமத்துக்குள் கடையை மாற்றி அமைத்தால் பொதுமக்கள், பெண்கள் ஆகியோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, டாஸ்மாக் கடையை இடம்மாற்றும் முடிவை ரத்துசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.