மதுரை: வேல் யாத்திரைக்கு தடை கோரி ஆதிதமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

 

மதுரை: வேல் யாத்திரைக்கு தடை கோரி ஆதிதமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதமிழர் பேரவை அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை: வேல் யாத்திரைக்கு தடை கோரி ஆதிதமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

ஆதிதமிழர் பேரவையின் துணை பொதுச்செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மதுரை: வேல் யாத்திரைக்கு தடை கோரி ஆதிதமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

அப்போது, மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கவும் கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவை வழங்கினர்.

மதுரை: வேல் யாத்திரைக்கு தடை கோரி ஆதிதமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்