கணவன் தன் தாயாருடன் இருந்ததை பார்த்த மனைவி தற்கொலை; உறவை தொடர விரும்பாத மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்

 

கணவன் தன் தாயாருடன் இருந்ததை பார்த்த மனைவி தற்கொலை; உறவை தொடர விரும்பாத மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்

ஐதராபாத்தில் ரமந்தாபூர் பகுதியை சேர்ந்த நவீன் என்பவரின் மனைவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால், கணவன் நவீன் தான் இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகித்த உப்பல் காவல்நிலைய போலீசார், நவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில் நவீன் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் நவீன் படுகொலைக்கும், மனைவி தற்கொலைக்கும் காரணம் மாமியார் அனிதாதான் என்று தெரியவந்ததும் அப்பகுதியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கணவன் தன் தாயாருடன் இருந்ததை பார்த்த மனைவி தற்கொலை; உறவை தொடர விரும்பாத மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்

கணவனை இழந்த அனிதா, தன் மகளுடன் தனி்யாக வாழ்ந்து வந்திருக்கிறார். மகளுக்கு திருமண வயது வந்ததும் நவீன் என்ற இளைஞரை பேசி கல்யாணம் செய்து வைத்திருக்கிறார். கல்யாணத்துக்கு பிறகு மகள் கணவன் வீட்டுக்கு போய்விட்டாலும், அடிக்கடி தன்னை பார்த்துக்கொள்ள மகளை தன் வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கிறார் அனிதா.

தனியாக இருக்கிறார் என்று அப்பெண்ணும் அடிக்கடி வந்து தாயாரை கவனித்துக்கொண்டு சென்றிருக்கிறார். அப்படி அவர் வரும்போதெல்லாம் கணவனும் கூடவே வந்திருக்கிறார்.

கணவனை இழந்து வாழ்ந்து வந்த அனிதாவுக்கு, நவீன் மேல் ஒரு இனம்புரியாத பிரியம் வந்திருக்கிறது. நவீனும் மாமியாரின் பிர்யத்திற்கு இசைந்திருக்கிறார். நாளடைவில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கும் அளவுக்கு போயிருக்கிறது.

தான் அம்மாவை பார்க்க செல்லாத போதும், தன் கணவன் மாமியாரை பார்க்க அடிக்க செல்வது நவீன் மனைவிக்கு சந்தேகத்தை கொடுத்தது. மேலும், தன்னுடன் பேசுவதை விடவும் தன் அம்மாவிடம் கணவன் அடிக்கடி பேசுவதும் சந்தேகத்தை கொடுத்திருக்கிறது.

இதனால், மாமியாரை பார்த்துவிட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு சென்ற நவீனை பின் தொடர்ந்திருக்கிறார் மனைவி. மறைந்து நின்று வீட்டிக்குள் எட்டிப்பார்த்தபோது, கணவனும் அம்மாவும் உல்லாசமாக இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

கணவன் தன் தாயாருடன் இருந்ததை பார்த்த மனைவி தற்கொலை; உறவை தொடர விரும்பாத மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்

பெற்ற தாயாச்சே என்று வெளியிலும் சொல்ல முடியாமல், சகித்துக்கொள்ளவும் முடியாமல் மன உளைச்சலில் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலை வழக்கில் சிறை சென்றுவிட்டு திரும்பியதும், குற்ற உணர்வில் மாமியாரிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்தி இருக்கிறார் நவீன்.
தனக்கு பிரயோசனம் இல்லாத மருமகன் சாவதே மேல் என்று நினைத்த அனிதா, நவீனை வீட்டுக்கு வரச்சொல்லி, படுகொலை செய்திருக்கிறார். கைதாகி இருக்கும் அனிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ்.