கன்னியாகுமரி: அகற்றப்பட்ட நினைவுஸ்தூபியை மீண்டும் நிறுவ கோரி ஆர்ப்பாட்டம்

 

கன்னியாகுமரி: அகற்றப்பட்ட நினைவுஸ்தூபியை மீண்டும் நிறுவ கோரி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட எல்லை போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் நினைவாக வைக்கப்பட்ட ஸ்தூபியை, மீண்டும் நிறுவ வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெட்டுவெந்நியில் உள்ள குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி: அகற்றப்பட்ட நினைவுஸ்தூபியை மீண்டும் நிறுவ கோரி ஆர்ப்பாட்டம்

அப்போது, மார்த்தாண்டம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிக்காக அகற்றப்பட்ட நினைவு ஸ்தூபியை மீண்டும் அதே பகுதியில் நிறுவ வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், குமரி எல்லை போராட்டத்தின் தியாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு நினைவுபடுத்தும் இந்த ஸ்தூபியை புதுப்பித்து மீண்டும் நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.