காரைக்கால்: தேசிய ஒற்றுமை நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்
Oct 31, 2020, 16:31 IST1604142100000
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், சர்தார் பல்லபாய் படேலின் 145-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர், முதுநிலை எஸ்.பி., மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, படேல் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து காவல்துறை அணிகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட அவர்கள், பின்னர் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கெண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், மருத்துவர்கள், நலவழித்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர், சேவையை பாராட்டி சிறப்பிக்கப்பட்டனர்.