அதிகப்படியான உயிர்காக்கும் கருவிகளுடன் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு சிகிச்சை

 

அதிகப்படியான உயிர்காக்கும் கருவிகளுடன்  அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு சிகிச்சை

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டும் அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான உயிர்காக்கும் கருவிகளுடன்  அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு சிகிச்சை

மூச்சுத்திணறல் காரணமாக அக்டோபர் மாதம் 13ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சருக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சையும் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அமைச்சரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அறிகை தெரிவிக்கிறது. அதிகப்படியான உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளித்தும் அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.