கோவை: சிறுமியை திருமணம் செய்த உறவினர், கடத்தி தாலிகட்டிய லாரி ஓட்டுநர் கைது

 

கோவை: சிறுமியை திருமணம் செய்த உறவினர், கடத்தி தாலிகட்டிய லாரி ஓட்டுநர் கைது

கோவையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த உறவினர் மற்றும் அவரை கடத்திச்சென்று 2-வது திருமணம் செய்த லாரி ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, அவரது பெற்றோர் திண்டுக்கல்லில் உள்ள உறவினருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். இதனை தொடர்ந்து, கணவருடன் வசித்து வந்த அந்த சிறுமி, உறவினரின் சிகிச்சைக்கு உதவியாக வத்தலகுண்டு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு சிகிச்சை பெற்றுவந்த முத்தூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கோவை: சிறுமியை திருமணம் செய்த உறவினர், கடத்தி தாலிகட்டிய லாரி ஓட்டுநர் கைது

இருவரும் தொலைபேசி மூலம் தங்களது உறவை நீடித்து வந்த நிலையில், இதனை அறிந்த கணவர் சிறுமியை கண்டித்துள்ளார். இதனையடுத்து, கோவையில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்த அவர், திடீரென மாயமானார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் கொடைக்கானல் பகுதியில் இருந்த சிறுமியை தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை கடத்திச்சென்ற லாரி ஓட்டுநர் சிவா, அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. சிறுமிக்கு 17 வயதே ஆகியதால், இந்த வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, சிறுமிக்கு 15 வயதில் திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர் மற்றும் கணவர் உள்ளிட்டோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்திச்சென்று இரண்டாவது திருமணம் செய்த சிவா மற்றும் அவரது கணவரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.