திருவள்ளூர்: பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி விளையாடிய சிறுவன் மூச்சுத்திணறி பலி

 

திருவள்ளூர்: பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி விளையாடிய சிறுவன் மூச்சுத்திணறி பலி

திருத்தணி அருகே முகத்தில் பிளாஸ்டிக் பையால் மூடி விளையாடிய 5 வயது சிறுவன், மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பூபாலன் – சங்கீதா தம்பதியினருக்கு, தனம் (6) என்ற மகளும், சுஜித்(5) என்ற மகனும் உள்ளனர். நேற்று பூபாலன் பணிக்கு சென்ற நிலையில், மாலையில் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு சங்கீதா வெளியே சென்றுள்ளார்.

திருவள்ளூர்: பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி விளையாடிய சிறுவன் மூச்சுத்திணறி பலி

இந்நிலையில், தனது சகோதரி தனத்துடன் தொலைக்காட்சி பார்த்துகொண்டிருந்த சிறுவன் சுஜித், விளையாட்டாக வீ்ட்டில் இருந்த பிளாஸ்டிக் பையால் தலை மற்றும் முகத்தை மூடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை அறியாத தனம், தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

திருவள்ளூர்: பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி விளையாடிய சிறுவன் மூச்சுத்திணறி பலி

இந்நிலையில், சங்கீதா வீட்டிற்கு திரும்பியபோது, சிறுவன் மயங்கிகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். சம்பவம் குறித்து,. திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்: பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி விளையாடிய சிறுவன் மூச்சுத்திணறி பலி