திண்டுக்கல்: ஶ்ரீமுடிமலை ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் – பக்தர்கள் சுவாமி தரிசனம்

 

திண்டுக்கல்: ஶ்ரீமுடிமலை ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் – பக்தர்கள் சுவாமி தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அடுத்த களத்துப்பட்டி ஶ்ரீமுடிமலை ஆண்டவர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துங்கிய கும்பாபிஷேக விழாவில், யாகசாலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்துஇரண்டாம் காலயாக பூஜையின்போது பூர்ணாகுதி தீபாராதனை, விமான கும்பாபிஷேகம், முலஸ்தான கும்பாபிஷேகம் ஆகியவற்றுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10.30 மணியளவில் ஸ்ரீமுடிமலை ஆண்டவர் கோயில், கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகளின் மூலஸ்தான விமான கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.